Saturday, February 13, 2010

நான் தனியே...


நீ
கணிணிமையத்திற்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே எத்தனைமுறை உன்னோடுபேசும்
ஒத்திகையோடு பாதையை கடந்திருப்பேன்.

நீ
கிருஷ்ணன்கோவிலுக்கு வருவதற்கு முன்பும்
செல்வதற்கு முன்பும்
நான்தனியே அடுத்தமுறையாவது உன்னோடுசேர்ந்து
வரவேண்டுமென்று பிரகாரத்தை சுற்றிவந்திருப்பேன்

நீ
பேருந்தில்கல்லூரிக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே இன்றாவது உந்தன்பார்வை
என்மீதுவிழ படியில் தொற்றிபயணித்திருப்பேன்

நீ
பயிற்சிவகுப்புக்கு செல்லும் போதும்
திரும்பி வரும்போதும்
நான்தனியே என்றாவது உன்கரம்பிடித்து
ஒன்றாயிணைந்து வலம்வர எண்ணிமகிழ்ந்திருப்பேன்.

அன்று
உன்னோடு நான் வாழநினைத்த கனவுகள்
எல்லாம் நினைவாய் போனதடி

இன்று
என்னோடு நீ வாழ்ந்திட்ட நினைவுகள்
எல்லாம் கனவாய் போவதேன்

நான்தனியே
காதலின் வடிவில் கனவிலும் சரி
நினைவிலும் துடியாய் துடித்துக்கொண்டே...

2 comments:

புலவன் புலிகேசி said...

gud

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புலிகேசிக்கு,

வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் என் நன்றிகள்...