Friday, January 1, 2010

என்னவளே!!!

வானத்தில்...

நள்ளிரவில் என்வீட்டு மாடியில்
நான் உன்னை நிலவாய்
நினைத்து ரசிக்க நினைத்தேன் - நிறமற்ற
வானவில்லாய் வந்து மறைந்தாயோ.

நண்பகலில் என்வீட்டு தோட்டத்தில்
நான் உன்னை சூரியனாய்
எண்ணி மயங்கிட நடித்தேன் - ஒளியற்ற
நட்சத்திரமாய் ஒளிந்து காணாதிருந்தாயோ.


வாழ்கையில்...

நதி என்னும் இதயநீரோடையில்
நான் உன்னை மீனாய்
விழியில் கண்டு பிடித்தேன் - உயிரற்ற
உடலாய் மிதந்து மூழ்கடித்தாயோ.

நல்லறம் என்னும் இல்லறத்தில்
நான் உன்னை மனைவியாய்
மனதில் கொண்டு வாழ்ந்தேன் – வெட்கமற்ற
மங்கையாய்  வாழ்ந்து வீழ்த்திசென்றாயோ.

1 comments:

Unknown said...

வாழ வந்தாயோ
வீழ்த்திச் சென்றாயோ
மீண்டும் வருவாயோ
என்று காத்திருக்கிறதோ
காதலனின் காதல் மனம்....