Thursday, February 4, 2010

மனம்...

மனிதா!
மனம் இருந்தால்
மலையைகூட புரட்டலாம்.
இல்லையேல்!
புத்தகத்தின் பக்கத்தைகூட
புரட்ட முடியாது.
உன்னால்...
மஞ்சத்தில் புரண்டு
மட்டும் படுக்கின்றேன்.
என்னால்...
கண்களைகூட சிமிட்ட
கஷ்ட படுகின்றேன்.
கண்ணே!
எனக்காக நீயில்லாவிடின்
என்னையே இழந்திடுவேன்.
பெண்ணே!
என்னருகில் நீயிருந்தால்
விண்ணையும் அடைந்திடுவேன்.

4 comments:

அண்ணாமலையான் said...

பாவேந்தர் அப்பவே இப்படித்தான் சொல்லியிருக்கார்.. நீங்களும் அதயே அழுத்தமா சொல்றீங்க.. வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அண்ணாமலையானுக்கு, தங்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்றும் உங்களை போன்றவர்களின் வருகையை எதிர்நோக்கி இவன்...

வைகறை நிலா said...

நேசம் என்ற உணர்வு.. எத்தனை அற்புதமாக எதையும் சாதிக்கும் நம்பிக்கையை தருகிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பானது...
அரவணைப்பாய் இருக்கும் சமயம் எதையும் சாதிக்க துடிக்கும் இதயமே... அங்கீகரிக்க மறுக்கும் சமயம் எதையும் சாதிக்க முடியாதுயென துவண்டுபோவதேன்...