Wednesday, February 10, 2010

என் இதயகோவில்...

என்இதயம் என்னும் கோவிலில்
இதயதுடிப்பும் என்னும் மந்திரம்கூட
உன்பெயர் சொல்லிதான் துடிக்கின்றது.
என்மனம் என்னும் விளக்கில்
ஆசை என்னும் திரியும்கூட
உன்நினைவு வடிவில்தான் ஒளிருகின்றது.

அங்கு அதில் அன்று,
நீசொன்ன பதில் வார்த்தைகளும்
காதலிக்கின்றேன் என்னும் சொல்லும்
காற்றாக என்மனதை அடைந்து
தென்றலாக மாறி இதயதீபத்தை
பிரகாசிக்க வைத்தது வாழ்கையாய்.

என் அன்பே இன்று,
பிரியும்முன் உன்னுடைய கண்ணீரும்
மறந்துவிடுவோம் என்னும் வார்த்தையும்
மழையாக என்மனதை வதைத்து
புயலாக மாறி இதயதீபத்தை
மட்டுமில்லை என்னையும் அழிக்கிறது.

4 comments:

வைகறை நிலா said...

"தினம் ஒரு தகவல்"
என்பது போல்
தினம் ஒரு கவிதையா..
..
அற்புதமாக இருக்கிறது..!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலாவுக்கு,

என் மனமார்ந்த நன்றிகள்.

எல்லாம் ஒர் முய(பயி)ற்சியாய், தினம் உதிக்கும் சூரியனை போல்.

Unknown said...

Good. Eager to know the back ground??

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Dear Rathina,

How are you? Thanks for your comment & visit.

//Eager to know the back ground??

Sure... We can share