Friday, February 26, 2010

பிரியும் நேரம்...


என்று உன்னை சந்தித்தேனோ
அன்றிலிருந்தே என்னில் சிந்தித்தேன்
என்னவென்று சிந்தித்தேன் என்றால் - மீண்டும்
உன்னை  காணும் வழியெண்ணி...

நினைத்துபார்க்க நினைவு பரிசினை 
உனக்காக நான் அளித்தேனடி
எனக்காக நீகொடுக்க எதுவும் - இல்லையடி
உன்னையே என்னிடம் தந்தபிறகு ...

என்னைவிட்டு பிரியும் நேரம்
என்னை எண்ணி நீயிருக்க
என்னிடம் கொடுப்பதற்கு என்னுயிரும் - இல்லையடி
எந்தன்வசம் முத்தத்தை தவிர...
ImageBoo Free Web Hosting

2 comments:

அண்ணாமலையான் said...

ரைட்டு (கொடுத்தீங்களா?)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தோழா, இன்னும் இல்ல...

இது தினம் தினம் நடப்பது... எப்போ இறுதினு இன்னும் தெரியல...