Tuesday, February 23, 2010

காதல் வாழ்வின் உ(து)யரமா?

வறுமையில் வாடிய போதும்
செழிப்பின் உயரத்தை அறிந்தேன்
காரணம் உன்னை என்
மனதில் சுமக்க நினைத்(திருந்)ததால்...


 


செல்வம் செழிக்கும் போதும்
வறுமையின் துயரத்தை உணர்கின்றேன்
காரணம் என்னை உன்
மனதில் இருந்து தூக்கியெறிந்ததால்...

4 comments:

தஞ்சை-முரளி said...

காதல் வெற்றி பெற்றால் உயரம்;
தோல்வி என்றால் துயரம்;

ஆனால் பல காதல் தோல்வியில் தான் உயரத்தை அடைந்துள்ளது...

அருமையான கருத்து கவிதை....

தஞ்சை-முரளி said...

காதல் ஒரு கழுதை மாதிரி. முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

தத்துவம் எல்லாம் பலமா இருக்கு...

தஞ்சை-முரளி said...

அண்ணா...

தத்துவம் எல்லாம், பிறரின் அனுபவங்களின் வழி அறிந்து கொண்டது.... இன்னும் சொந்த அனுபவம் வரவில்லை....