Monday, December 7, 2009

நீயும் நானும் ...

நீ
என்னோடு ஊட்டியில்
உன்கைகோர்த்து நடக்கையில்
பனிக்கட்டியில்லாமல் நடைபாதையில்
புகைமண்டலமாய் தோன்றியது - ஏனோ
நம்தோள்கள் உரசியதால் என்னவோ?






நான்
உன்னோடு தார்பாலையில்
என்தலைசோர்ந்து தொடுகையில்
கானல்நீரில்லாமல் மணல்பாதையில்
நீர்துளிகளாய் பூத்தது - ஏனோ
நம்உதடுகள் பேசியதால் என்னவோ?

0 comments: