Friday, December 18, 2009

காதலுக்கு கட்டளை

காதலே ...

உள்ளத்தில் உறுதியில்லாதவரிடம்
நீ சென்று
உன்னை ஏன் உருக்குலைத்து
கொள்கிறாய்?

உண்டாக்கும் தடையை
உடைப்பவரிடம் சென்று
உன்னை நீ
வாழவைத்து கொள்வாயாக...


(இது முக்கியமாக
மனதில் உள்ளதை வெளியில் சொல்லாதவர்களுக்கும்
காதலன் / காதலி பெயரை கூட கைபேசியில் சேமிக்காதவர்களுக்கும்)

0 comments: