Tuesday, December 22, 2009

வார்தையல்ல வாழ்கை ...

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
என்று நீ மனதில் நினைக்கலாம் - உண்மை
சுரைக்காயில் செய்த சாம்பாறும்
தேங்காய் கலந்த கூட்டும் ருசி மாறாது.


அதுபோல்,
என் வார்த்தைகள் காதலுக்கு உதவாது
என்றும் படிப்பதற்கு அழகுயென எண்ணலாம்...
வார்த்தையல்ல நான் கொண்டபாசமும்
பண்பும்பற்றும் என்றும் வாழ்கையில் மாறாது.


என்னை விரும்பியது மட்டுமில்லாமல்

என்னை நம்பியும், நில்லாமல்
என்கரம் பற்ற வந்திடு
என்சிரம் சாயும்வரை
உன்மனம் கோணாமல்
நம்மனம் தளராமல்
தன்மானம் இழக்காமல்
ஒன்றாய் ஆண்டுபல வாழந்திடலாம்.

1 comments:

Unknown said...

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா.. என்ற பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது என்றாலும்... வார்த்தைகள் புரிந்தும் காதலிக்கு விடை சொல்ல என்ன தயக்கமோ...