Sunday, December 20, 2009

நீ அறிவாயோ?


நீ அறிவாயோ?
கண்ணில் கண்ட உன் கண்ணீரை
விரல்களால் துடைத்திட என் கரம்
துடித்தது அதனை செய்திடாமல்
என் மனம்  நொறுங்கிப்போனது.
 நீ அறிவாயோ?



நீ அறிவாயோ?
உன் விருப்பம் இல்லாமல் நான்
உன் விரல்நுனியை - அல்ல அல்ல
உன் மேனிதுணியும்
உன் ஒற்றைகேசமும்
என்னை தீண்டுவதையும்
தவிர்த்தேன் விருப்பமாய்.
நீ அறிவாயோ?



நீ அறிவாயோ?
உன் கூந்தலை வருடி
உன் நெற்றியில் முத்தமிட்டு
உன் இடக்கையை
என் இருகையால் பிடித்து - உன்னை
என் தோளில் சாய்த்து
என் ஆறுதலையும்
என் அன்பையும் காட்டி
உன் சோகத்தை மறந்துவிட
என்னால் செய்யமுடியாமல்
என்னுயிரை இழந்தேனடி...
நீ அறிவாயோ?

என்னுள் எத்தனையோ நீ அறிவாயோ?
நீ அறிவாயோ? நீ அறிவாயோ? நீ அறிவாயோ?

0 comments: