Sunday, December 20, 2009

தேவை உந்தன் ஒற்றைச்சொல்

விரும்பமானவளே !!!

வீட்டின்...
விலாசம் தந்துவிடு
விசாரித்து வந்துவிடுவேன்
விவாதம் செய்யல்ல  - உன்னை
விவாகம் செய்திட...


உன் ஒருவார்தைபோதும்...

உலகத்தை ஒன்றுதிரட்டி
உன்ஊரில்   ஒன்றுகூட்டி
பெற்றோரின் சம்மதத்தை
பெற்றெடுத்து கரம்கோர்ப்பேன்.


இல்லையேல்...

உலகம் திரண்டுவந்தாலும்
ஊர்  இருண்டுபோனாலும்
உன்னோடு வாழ்வதற்கு - உன்
உள்ளங்கையோடு சேர்ந்திருப்பேன்.

0 comments: