Monday, December 21, 2009

உன் பதிலை வேண்டி…

அன்றுபோல்

சங்ககால காதலாய் இருந்திருந்தால்
தலைவி, தலைவன் மேல்கொண்ட
காதலை தோழியறிந்து
தோழி செவிலியிடம் உரைத்து
செவிலி நற்றாயிடம் எடுத்துக்கூறி - நாம்
மணக்கோலம் பூண்டு மகிழ்ந்திருக்கலாம்….



ஆனால்
கலியுக காலம் என்பதனாலோ
என்னை காணாமலே காதல்கொண்டு
என்னை கண்டபின்பே உன்மனதை
மனையோரிடம் சொல்லியதாக
சொல்லி ஏற்கவில்லை என்பதைமட்டும் - என்
மனம்கோணிட கண்ணீர் சிந்தாமல் சொல்லிசென்றாய்…



இன்றும்

வரும்எதிர் காலம் நம்முடையதாக
என்னை உன்தோழியாய் எண்ணி
உன்ஆழ் மனதில்பதிந்து இருப்பது
என்னவென்று கூறிவிடு சம்மதமென்றால்
மறுமுறை போராடி பார்க்கலாம் – நம்
மனசோகம் இன்றே நீக்கிவிடலாம்.

0 comments: