Friday, December 18, 2009

காதல் வேதனை

பெண்ணே !
என் வாழ்க்கையெனும் மேடையில்
உன் நாடகத்தை மௌனத்தால்
அரங்கேற்றி வெற்றி கொண்டதைபோல்
அருமையாக சிறகடித்து பறந்துவிட்டாய்...

இங்கு
என் கவிதையின் வரிகள்
என் உள்ளத்தின் வலிகள்
வெறும் வார்த்தையாய் உனக்கு
வெறும் கண்களுக்கு தெரியும்.

அவை
என் கண்ணீரும் செந்நீரும்
என்பது உனக்கு தெரியாதா?

அதை
புரிய வைக்க உனக்கு
புதிய வெள்ளை காகிதத்தை எடுத்து
என் கண்ணீரில் நினைத்து
என் மனதால் சலவை செய்து
என் செந்நீரால் எழுதி வடித்து
எழுத்து அஞ்சலில் அனுப்ப வேண்டுமா?


0 comments: