Monday, December 21, 2009

இனி என்ன செய்ய

இன்றுவரை!

என்காதலை உன்னிடம்
நேரில் கூறியதில்லை
அப்படியிருக்க
உன்னிடம் என்னை
பிடித்திருக்கிறதா? இல்லையா?
என்று கேட்டது எந்தவறு
உண்மைதான் ஆனால் நான்
சொல்லாததற்கு காரணம் பலஉண்டு
என்பதை நீ தெரிந்திருப்பாய்.



கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன் அவன்
பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்
தைரியம் உள்ளவன் அவன் எனும் பாடல்வரிகளுக்கேற்ப
உன்கண்களை பார்த்து நேரில்சொல்ல ஏங்கியவன் இவன்.


அதனால்தான்...
பனிவிழ தொடங்கும்
கார்த்திகை மாதம்
முழுநிலா முகம்காட்டும்
பெளர்ணமி திருநாள்
பொன்கிடைத்தாலும் கிடைக்காத
புதன்கிழமை வாரம்
இரவும்பகலும் கூடல்கொள்ளும்
மாலை நேரபொழுது
அமைதியும் அருளும்நாடும்
இறைவன் சன்னதி
உன்னைநான் கண்டிட
மையல் கொண்டேன்



மேலும்...

சுற்றிவரும் வெளிபிரகாரத்தில்
கோவில் தின்ணையில்
நீ அமர்ந்து இருக்க
உள்ளிருக்கும் தெய்வத்தை
மட்டுமல்லாது
வானவீதியில்
வீற்றிருக்கும் இயற்கைத்தெய்வதையும்
முன்னிருத்தி
நான்கொண்ட காதலை
முதற்முறை பூவொன்றை கையில் கொடுத்து
உன்கண்ணை பார்த்தும்
இரண்டாம்முறை உன்னருகில் அமர்ந்து
உன்கரங்களை பிடித்தும்
மூன்றாம்முறை எந்தோளில் சாய்த்தும்
உன்னை வருடியும்
நான் உன்னை காதலிப்பதையும்
என்னுயிருள்ளவரை உன்னோடுயிருப்பேன்
என்பதையும் சொல்ல துடித்தேன் அன்று...


ஆனால்

உன்னை முதலில் கண்டபோது
என்காதலை உன்னிடம் சொல்லவில்லை
காரணம் உன் உடன்பிறப்பு மட்டுமில்லை
மத்திய அத்தியாயம்வரை படித்த நாம்
மீண்டும் முதல்அத்தியாயம் படிக்கவேண்டாமென்றுதான்
காத்திருந்த சமயத்தில் உன்னிடம்
சொல்லவில்லை
சொல்ல முடியாமலுமில்லை
சொல்ல கூடாதென்பதுமில்லை
சொல்லியிருந்திருக்கலாம் - இனி என்ன செய்ய?

0 comments: