Monday, December 21, 2009

உன்உதட்டில் என்றும்
புன்னகை பூத்திருக்கவேண்டும்
அந்த புன்னகைக்கு

நான் காரணமாயிருக்கவேண்டும்
அந்த காரணத்தில்
என்முகம் மலர்ந்திருக்கவேண்டும்
அந்த நினைப்பிலே
என்னுயிர் வாழ்ந்திருக்கவேண்டும்
என்று எண்ணிய என் நெஞ்சிற்க்கு
உன்னை காணும் இரண்டாம் முறையே
உன்கண்களில் கண்ணீரை
கண்டேனே! காரணம் நீயே கூறுவாயா?.


என் உணர்ச்சிகளும் உணர்வுகளும்
இன்னும் தெரிந்தும்தெரியாமலா நீ? - இல்லை
என் உண்மையும் உறவும்
இனியும் வேண்டவேவேண்டாம் என்றாநீ?
உன் நெஞ்சில் என் நினைவையும்
கண்ணில் கண்ணீரையும்
உதட்டில் மெளனத்தையும்
மனதில் தைரியத்துடனும்
என் கண்முன்னே வந்து
பேசாமல்பேசி சென்றாயடி.

இனியாவது
உன்மெளனத்தை கலைத்(ந்)து
பேசாது நடிக்கும் நாடகத்தையும்
உடைத்து காதலுக்கொரு
உயிரை கொடுத்திடு
உனக்காகவும்
உன்அழைப்பிற்காகவும் காத்திருப்பேன்என்றும்...

0 comments: