Wednesday, September 8, 2010

என் மனம்...

உன்னை பிரிந்து
வீட்டை விட்டு
வெளியேறிய சமயம்
என்மனம் கல்லாய்
போயிருந்தால் உன்வீட்டினில்
உந்தன் உள்ளத்தினில்
உள்ளேயே சுயம்புவாய்
உருமாறி இருந்திருப்பேன்...

ஏனோஅது  உடைந்து
பொடிபொடியாய் சிதறி
போனதனால் என்னுயிர்
உன்னை விட்டுபிரிந்து
உன்நினைவோடு காற்றினில் - கலந்து
என்வாசல் வந்தேனே...

0 comments: