Sunday, September 19, 2010

மரணம்....

அவளை அடைய முடியாமல்
போனதால் உன்னை அடைய
நினைத்தேன்....

அவள்தான் என்னை தழுவாமல்
மறுத்தால் என்றால் நீயுமேன்? - என்னை
கைவிடுகின்றாய்...

அவளின் இதழ்களை முத்தமிட
துடித்த என்னிதழ்கள் உன்னை
முத்தமிட துடிக்கின்றன - அவள்போல்
நீயும் மறுப்பதேன்?

6 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

கவனம் தோழா சுட்டுவிடும் அந்த உதடுகள்

elamthenral said...

first belated birthday wishes to you sir... this year brings you more happy....

Anonymous said...

வார்த்தைகளில் எப்போதும் ஒரு வித சோகம் ஏன்???


தாமதமாய் வாழ்த்துகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

உதடு சுட்டபின் உடல் சுடட்டுமே என்றுதானே அதனை நாடி...

அதுக்கு எல்லாம் பயந்தா ஆகுமா?


மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி...

தங்களின் அன்பான வாழ்த்திற்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

தங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

அது ஏனோ தெரியவில்லை... சுகத்தின் முடிவு சோகமாய் அமையலாம் என்பதனாலோ? என்னவோ?

சுகங்கள் அருவியாய் எப்பொழுதும் இருந்தாலும்... வரிகளில் சோகம் கடலாய் உருவாகிக்கொண்டே...

மாற்றம் வரும்... தங்களை போன்ற நல்லுள்ளங்களால்... நம்பிக்கையுடன்.