Wednesday, September 8, 2010

நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?

உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்க - என்னிடம்
சொன்னாய்..

காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?

சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடமல் - இவன்
போனதேன்?

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?

0 comments: