Friday, September 17, 2010

விளையாட்டு வினையானதோ?

நண்பா!
புதிதாய் சிறகு
முளைத்து பறக்க
நினைத்த பறவையை
பிடித்து அதன்சிறகை
ஒடித்தெறிவதாய்...

அவள் எண்ணத்தை
புரிந்து கொள்ளாமல்
உன்எண்ணத்தை
காட்ட முடியாமல்...
பறவையின் சிறகை
கிள்ளியதுபோல்நீ....

சிறகை கிள்ளியிருந்தாலும்
பராவாயில்லை
உன்வார்த்தையால்
அவளையே கொன்றாயே...
இணையத்தின் வழியே
இதுஏனோ?

இணையம் இனி
தேவை தானோ?
அவள் மனதினுள்
கேள்வியோடு....
மறந்தாலும் மனதினில் - சுட்ட
நினைவுகளோடு...

8 comments:

தோழி said...

இந்த நாள் இனிய நாள்...
இனி வரும் நாட்களும் இனிமையாய் அமைந்திட வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழி,

தங்களின் அன்பான வரவிற்கும்...

இன்சுவையான வாழ்த்திற்கும்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி...

அண்ணாமலை..!! said...

நண்பரே! காலம் கடந்து வந்தாலும்,
இதோ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்காக!

அண்ணாமலை..!! said...

நண்பரே! காலம் கடந்து வந்தாலும்,
இதோ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்களுக்காக!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

காலம் கடந்து எல்லாம் வரவில்லை தக்க தருணத்தில், அன்பினைக்கொண்டு வாழ்த்துகளாய் உங்கள் வரிகளில் இரண்டுமுறையாக வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி...

என் மனமர்ந்த நன்றிகள்...

vetrithirumagal said...

very painful

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

அடிப்பட்ட இதயத்திற்குதான் தெரியும் உண்மையான வலி...