Wednesday, September 8, 2010

நீ... நான்... அணு...

அணுவின்றி பொருட்கள் ஏதுமிருக்காது
ஆராய்சியாளன் சோதனையில்
கண்டுபிடித்தது...

அவளின்றி அசையாது ஓர்அணுவும்
கவிஞன் சோகத்தில்
உணர்ந்தது...

அணுவின் பிளவில் அழிவிருக்கும்
உண்மைதான்...
அவளின் பிரி(ள)வில் என்அழிவு.

ஓர்அணுக்குள் மூன்று துகள்கள்
உனக்கு நானும் அணுவாய்
நண்பனாய் காதலனாய் கணவனாய்
இருக்கும் ஆசையில் என்றும்...

4 comments:

Aathira mullai said...

அணுக்கருவின் சேர்க்கையினும் ஆற்றல் விளைவிப்பதுவே காதல்..காதல் அணு ஒவ்வொரு அணுத்திறளிலும் ஓடிக் கலந்திருக்கும் உண்மை அறிந்திடுவார் உண்மைக் காதல் அறிந்தவர்கள்.

எல்லாமுமாய் இருக்க நினைக்கும் உனக்கு எல்லாமுமாய் அவள் அமைய என் வேண்டுதலும் இறைவனிடம் இருக்கும் என்றும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

இறைவன் தான், அவள் எவளோ? பிறந்திருந்தால் காட்டவேண்டும்...

மிக்க நன்றி... தங்களின் அணுசேர்க்கை போன்ற பின்னூட்டத்திற்கு...

Anonymous said...

anuvin pilavil kooda kaathalin velippaadaa..pon

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

அணுவின்றி எதுவும் உலகில் அமையாது...

அவளின்றி எதுவும் என்னுள் அமையாது...

மிக்க நன்றி...