Sunday, September 26, 2010

நிறைவேறுமா?

எந்தன் மனதுக்குள்
எண்ணற்ற ஆசைகள்
கனவாய் தோன்றி
காணாமல் போனாலும்..
மற்றவர்களின் ஆசைகளுக்காவது
உற்றதுணையாக இருந்து
உயிர்கொடுக்க நினைக்கிறேன் - அவையாவது
நினைவாகி போகட்டும்..

8 comments:

Aathira mullai said...

”உண்டாலம்ம இவ்வுலகம....
புகழெனின் உயிரையும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே..” என்ற புறநானூற்றுப் புலவனின் கருத்தை
புதுக்கவியில் சொன்ன எம் அன்பில் மாய்ந்த இளம்பெருவழுதியே! வாழ்க நின் கவித்திறன் மட்டுமல்ல பொது நலம்..அதில் கரைய எம் போன்ற உறவுகளின் உள்ளங்கள்..

Anonymous said...

a touching one....vazhga....

aathiraa azhagaka sollivittaar...pon

Anonymous said...

பூவே உனக்காக படம் பாத்தீங்களோ????

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

என்னமோ சொல்லுறீங்க...
நமக்கு, நீங்கள் சொல்வதை உங்களிடம் கேட்டுதான் அர்த்தம் தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது...

ஏதோ தங்களை போன்ற உறவுகள், உள்ளங்கள் என்னுடன் இணைந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி... தங்களின் நீண்ட நாட்களுக்கு பிறகான இனிய வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

இப்ப எதுவும் நான் பார்க்கவில்லை... சமீபத்தில் நீங்க பார்த்தீங்களா?

நன்றி தங்களின் இனிய வரவிற்கு...

elamthenral said...

all the best for your future project.... ungalin kavithaiku comments ezhutha time illa.. but continuous padithu kondu thaan irukuren... nice kavithai....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி...

எந்தன் எழுத்துடன் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி... என்றும் இணைந்திருப்போம்...

நானும் அப்படித்தான் பலருடைய வலைப்பூக்களில்...