Monday, September 27, 2010

அழுகுரல்...

உந்தன் குரலால் எங்கள்
மனதினை கரைப்பவளே
உந்தன் குரலே இன்று
கரைந்திருந்தது ஏனோ?

கணீரென்று எக்கணமும்
ஒலிக்கும் குரல்
கண்ணீர் சிந்தும்
குரலாய் கேட்டதேனோ?

இடைவெளி விட்டுவந்த
எந்தன் குரலை நீகேட்கமறுத்தாய்...
அப்படியிருக்க!
தடைப்பட்டு வெளிவரும்
உந்தன் குரலை நான்கேட்பேனா?

2 comments:

Anonymous said...

அழுகுரல்..
சில நேரம் புரியாத குரலாகவும் இருக்கிறது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

புரியாமல் போனது எந்தன் அழுகுரலா?
புரியாமல் போவது பொதுவான அழுகுரலா?

எந்தன் அழுகுரலின் விளக்கம்...

ஏதோ ஒரு சோகத்தின் பாதிப்பால் கண்ணீருடன் அவள் என்னுடன் பேசுவதாக எழுதியது.சிலசமயம் காற்றில் குரல் சரியாக கேட்காமல் நாமே தொடர்பை துண்டிப்பது உண்டு. அப்படித்தான் அவளது அந்த குரலை கேட்க முடியாமல் நான் துண்டித்ததாக எழுதியது..

மிக்க நன்றி...